Posts

Showing posts from October, 2020

வலி

 சரண்யாவிற்கு சீமந்தம் முடிந்து இரண்டு நாட்கள் ஆகிறது. அவள் சீமந்தத்திற்காக வந்த அவளின் தங்கை ,அக்காவிற்கு ஒத்தாசையாக சரண்யா வீட்டில் தங்கியிருந்தாள். சரண்யாவிற்கு இது இரண்டாம் பிரசவம். ஆதலால் சீமந்தம் முடிந்து அம்மா வீட்டிற்கு செல்லும் சடங்கு எதுவும் கிடையாது. சொல்லபோனால் இரண்டாவது குழந்தைக்கு சீமந்த சடங்கே கிடையாது என்று தான் அவள் தாய் கூறினாள். ஆனாலும் தனது ஆசைக்காக சரண்யா அவள் கணவனிடம் தனக்கு சீமந்தம் நடத்த கேட்டதால் அவனும் அவளின் ஆசைக்காக அவன் செலவிலேயே மனைவிக்கு சீமந்தம் நடத்தினான். ஆனால் தலை பிள்ளைக்கு நடத்தியது போல் விமர்சையாய் நடத்தவில்லை.சரண்யாவின் தாய்,தந்தை,அண்ணன் அவளின் நெருங்கிய தோழிகள் இருவர்,சரண்யாவின் ஒன்று விட்ட தங்கை ராணி, இவர்களே அந்த சீமந்த வைபோவத்தின் விருந்தாளிகள். ராணியின் சொந்த ஊர் மதுரை. அவள் சென்னையில் இருக்கும் மென்பொறியியல் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறாள். சொந்தம் என்று கூற அவளுக்கு சென்னையில் பலர் இருந்தாலும், அவள் சரண்யாவின் வீட்டை தவிர வேறு எங்கும் சென்று தங்கி இளைபாறுவதில்லை. அதுவும் கூட அடிக்கடி செல்ல மாட்டாள். மூன்று அல்ல நான்கு மாதங்களுக்கு

சுத்தம்

 இடது புறமாய் பங்கஜத்தை திருப்பி விட்டுவிட்டு அவள் இயற்கை உபாதை அசுத்தங்களை சிறு முகசுழிப்பும் காட்டாமல் எடுத்து அப்புறபடுத்திக் கொண்டிருந்தாள்  கருப்பாயி.அசுத்தம் எல்லாம் அள்ளி போட்டுவிட்டு பங்கஜத்தை மெல்ல எழுப்பி உட்கார வைத்து கையில் தூக்கி கொண்டு அந்த அறையில் இருந்த 4*4 குளிரூமிற்குள் நுழைந்தாள்.ஐடம் போலிருந்த பக்கத்தை அந்த குளியலறையின் மூலையில் கிடந்த முக்காலியில் அமர வைத்தாள்.இடப்புறமாய் இழுத்து வைக்கப்பட்டிருந்த பங்கஜத்தின் கையோடு உயிரற்று போயிருந்த அவளின் வலது கையையும் சேர்த்து வைத்தாள். பங்கஜத்தின் காலை தூக்கி அந்த முக்காலியின் கட்டை மீது வைத்தாள்.மெல்ல பங்கஜத்தின் மேனி ஆடைகள் களைந்தாள் கருப்பாயி. பின்பு கம்பியில் முன்னரே அவள் போட்டு வைத்திருந்த துணியை எடுத்து அண்டாவில் நிரப்பி வைத்திருந்த சுடு தண்ணியில் மெல்ல நனைத்து இறுக பிழிந்து பங்கஜத்தின் ஒவ்வொரு அங்கமாய் துடைத்து சுத்தம் செய்தாள்.பின்பு  பங்கஜத்திற்கு புது துணி மாற்றி விட்டு அவளை கை தாங்கலாக அழைத்து வந்து பங்கஜத்தின் அறையில் இருந்த ஒற்றை நாற்காலியில் அமர வைத்து விட்டு,பங்கஜம் படுத்திருந்த கட்டிலை சுத்தம் செய்ய துவங்கினாள்